வணக்கம் அனைவரும் நலமா? எதையாவது எழுதனுமேன்னு தோணுச்சி அதான் .. இன்னைக்கு காலையில 9.15மணிக்கு பேருந்து நிலையத்துக்கு வந்தாச்சி ஆனா பேருந்து வழக்கம் போல தாமதமாக வந்தது. நாம லேட்டா வரும் போது மட்டும் சீக்கிரமா வந்துடும்.. பத்து நிமிடம் சுற்றி இருந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன் அழகான பெண்கள்.. கட்டிட வேலைக்கு செல்வதற்க்காக மேஸ்திரி எங்க சொல்ல போறாரோன்னு காத்திருந்த பெண்கள் வேலைக்கு செல்வதற்க்காக காத்திருந்த அழகான பெண்கள் (வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்கள் எப்பவுமே அழகுதான்) ஆண்கள் குறுகுறுவென பார்த்து கொண்டிருந்த நேரத்தில் திருப்பத்தூர் To ஆலங்காயம் JMS பஸ் வந்து சேர்ந்தது எப்பவும் இவ்ளோ நேரத்துக்கு பஸ் நிரம்பி வழியும் ஆனா இன்னைக்கு கூட்டம் குறைவுதான் முன்பக்கத்தில் ஏறி ஒரு அக்காவை உரசிகொண்டு உள்ளே சென்றேன் சீட் இருக்குமா என கண்கள் அலைந்தது ஒரு வழியாக. மூண்று சீட்டுஇருக்கும் பகுதியில் நடுவில் இடம் இருந்தது அந்த ஜன்னலோரத்தில் பொதி மாடுபோல ஒருவர் நடுசீட்டையும் ஆக்ரமித்து அமர்ந்திருந்தார் ஏண்டா எரும தள்ளிதான் உட்காரேன்னு சொல்ல தோணிச்சி ஏணோ சொல்லல.. இந்த பக்கம் அவ்ளோ உயரமா ஒரு ஆளு இவன